Pages

Friday, August 17, 2012

காதல் கவிதை 3


மூச்சுக்காற்றை கேட்டுப்பார்!

undefined
ரூபி
14, JULY 2012
Views 969
என்னுயிர்க் காதலனே
நீ நீராக வரும் வரை
நான் காத்திருப்பேன்
வேராகவே எனக்கு
வளர்ச்சி இல்லையடா
உன்னைக்காணும் வரை!
ஒருவேளை நீ நினைப்பாய்
மழைத்தூறல் பட்டு வளர்ந்து
வானத்தை நோக்குவேன்
என்று எண்ணத்திலும்
எண்ணிவிடாதே,
மண்ணுக்குள்ளேயே மறைந்திருப்பேன்
என் மறுமுகம் நீ வரும் போதுதானே
மலர்கள் வாசம் வீசும்! அதுவரை மலரைக்
கூட மாறி முகரமாட்டேன் முகர்வதை
மண் கொட்டி மூடியுள்ளேன்
மூச்சுக்கு முண்ணூறு தடவை
உன் பெயரையே சொல்லி சுவாசிக்கும்
என் மூச்சுக்காற்றை வேண்டுமானால்
கேட்டுப்பார் என்ன சொல்லுதென்று !

No comments:

Post a Comment