Pages

Friday, August 17, 2012

இந்த நூற்றாண்டு முடிவதற்குள் வேற்று கிரக வாசிகளை மனிதர்கள் சந்திப்பர்: விஞ்ஞானி


undefined
21ஆம் நூற்றாண்டு முடிவடைவதற்கு முன்பாகவே, மனிதர்கள் வேற்று கிரக வாசிகளுடன் நெருங்கிய சந்திப்பை மேற்கொள்வர் என ஜேர்மன் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனின் டப்ளின் நகரத்தில் சமீபத்தில் நடைபெற்ற யூரோசயின்ஸ் எனும் நிறுவனத்தின் திறந்தவெளி கருத்துக் கணிப்பின் போது, ஜோசெலின் பெல் பர்னெல் எனும் விஞ்ஞானியே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவர் மேலும் கூறுகையில், இந்த எச்சரிக்கை திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஆனதல்ல எனவும், உலகில் வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் அரசாங்கங்களுக்கு ஆனது எனவும் தெரிவித்தார்.
மேலும் மனித இனம் சந்திக்க நேரிடும் வேற்றுக் கிரக வாசிகள் மனிதனைப் போல் அல்லது மனிதனை மிஞ்சிய அறிவுத் திறன் உடையவையாகவோ அல்லது சாதாரண உயிரினங்களாகவோ இருக்க வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரிட்டனில் சுமார் 2000 மக்களுக்கிடையே ரோயல் சமூகம் நடத்திய கருத்துக் கணிப்பில் 44 வீதமானோர் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் போது பிரிட்டனின் மக்கள் தொகையில் அரைவாசிப் பேர் மிகச் சிறிய பச்சை நிற மனிதர்கள் பூமியில் மறைவாக உலாவுவதாக நம்பியிருந்தனர்.

No comments:

Post a Comment